கருமத்தம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி : விபத்துக்களை தடுக்க சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

கோவை : கரும்பர்தம்பட்டி அருகே மேம்பால பணிகளின் போது, ஊழியர்களின் அஜாக்கிதையால் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை : கரும்பர்தம்பட்டி அருகே மேம்பால பணிகளின் போது, ஊழியர்களின் அஜாக்கிதையால் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு இரவு நேரத்தில் பணி முடித்து தொழிலாளர்கள் தடுப்பு கம்பிகளை சர்வீஸ் சாலையில் வைத்து விட்டு சென்றதால் நேற்று முன்தினம் லாரி மோதியதில் மோகனப்பிரியா என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு தொழிலாளர்களின் அஜாக்கிரதையும், சர்வீஸ் சாலை குறுக்கப்பட்டதும் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மற்ற பகுதிகளில் 60 மீட்டர் அகலம் உள்ள சாலை, கருமத்தம்பட்டியில் 40 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து வரும் சூழலில், உடனடியாக சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் பழுதான மேம்பாலத்தை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். 



இதனிடையே, சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. இதில், கருமத்தம்பட்டி பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கருமத்தம்பட்டி பகுதியில் சாலை விபத்து அதிகரித்து வருகிறது. சாலை விரிவாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க முடியும். தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...