திருப்பூர் : தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில், திருப்பூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில், திருப்பூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் சுகாதாரம், கனிமவளம், குடிநீர் வாரியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட நான்கு துறைகளில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு செம்மலை தலைமையில் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ. செம்மலை, விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி அமைக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, பல்லடம் சாலையில் அமைந்துள்ள சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, நிறுவன குழுவினர் சாய சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும் முறைகளை கேட்டறிந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை பேசியதாவது :- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிக மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் என நூறு நகரங்களை ஆய்வு செய்ததில், திருப்பூர் மோசமாக மாசடைந்து உள்ள நகராக சேர்ந்துள்ளது. எனவே, தொழில் வளர்ச்சியை பாதிக்காத அளவில், மாசுபாட்டினையும் குறைக்கும் முயற்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளும் வழங்கப்பட்டு மாசுபாட்டினை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தார்.