புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யக்கோரி கோவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை : புதிய கல்வி கொள்கை குறைகளை களைந்திட வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : புதிய கல்வி கொள்கை குறைகளை களைந்திட வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தகுதி தேர்வை கைவிட வேண்டும், தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை கைவிட வேண்டும், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே நீடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கல்பனா, சசிகலா உள்ளிட்ட வட்டார தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் எனவும், மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும், மூன்று வயது முதல் 18 வயது வரை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது என்றும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று எனவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்பதில் தடை ஏற்படும் என தெரிவித்தனர். மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்க மொழி கல்வியை தேர்ந்து எடுக்க வேண்டும் எனவும், இது தவிர்த்து மும்மொழி கொள்கையை திணிக்க கூடாது, என அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...