கோவை :காந்திபுரம் டாடாபாத் அருகில் மாமனார் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : காந்திபுரம் டாடாபாத் அருகில் மாமனார் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதனின் மகள் சுதா. இவருக்கும் டாடாபாத் பகுதியில் வசித்து வரும் தயாள் ராஜ்குமாருக்கும் கடந்த 2014-ம் திருமணம் நடைபெற்றது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதாவிற்கும், தயாள் ராஜ்குமாரின் பெற்றோருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால் கடந்த சில வருடங்களாகவே மாமனாரின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டும் சுதா, தனது கணவருக்கு ஆண்மை இல்லாததை காரணம் காட்டி, தன்னிடம் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என மாமானர் சின்னசாமி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல, மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன், வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து, தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாமனார் வீட்டின் முன் மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.