கோவையில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மெழுகு மூலம் விநாயகர் செய்து விழிப்புணர்வு

கோவை : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மீன்வடிவில் தேன் மெழுகை பயன்படுத்தி விநாயகர் சிலையை வடிவமைத்து தங்கநகை பட்டறை தொழிலாளி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மீன்வடிவில் தேன் மெழுகை பயன்படுத்தி விநாயகர் சிலையை வடிவமைத்து தங்கநகை பட்டறை தொழிலாளி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா. இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவ்வப்போது பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். 100 மி.கி. தங்க கோப்பை, ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் விதமாக தீக்குச்சி நுனியில் சிறிய நுண்ணிய காளை, மரம் நடும் விநாயகர், ஹெல்மெட் விநாயகர் என ஏராளமான சிற்பங்களை வடிவமைத்து உள்ளார். 



தற்போது மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி தேன் மெழுகு கொண்டு மீன் வடிவில் விநாயகர் சிலை செய்துள்ளார். இதேபோல், மற்றொரு சிற்பத்தில் மழை நீர் காக்கும் மகா கணபதி சிலையையும் செய்துள்ளார். மழைநீர் விநாயகர் சிலை மீது வடிந்து குடத்தில் சேகரிப்பது போல வடிவமைத்து உள்ளார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இவ்விரு சிற்பங்களை செய்ததாகவும், இதனை செய்ய இரண்டு நாட்கள் ஆனதாக அவர் தெரிவித்தார்.தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ள மழை நீர் சவால்களை கருத்தில் கொண்டு, இதனை உருவாக்கியதாக அப்போது தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...