கோத்தகிரியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது : ரூ.1.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நீலகிரி : கோத்தகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாகனங்கள், செல்போன் மற்றும் ரூ. 1.25 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாகனங்கள், செல்போன் மற்றும் ரூ. 1.25 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மலைகளின் இளவரசியான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ்கள் செதல்பட்டு வருகின்றன. அதில், ஒரு சில காட்டேஜ்களில் சூதாட்டம், விபச்சாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கோத்தகிரி கிரீன்வேலி பள்ளி அருகே உள்ள தனியார் காட்டேஜில் பணம் வைத்து, சீட்டு விளையாடிய காட்டேஜ் உரிமையாளர்கள் ராஜா (52) உள்பட 20 பேரை காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 19 செல்போன்கள், ரூ. 1,25,371 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் காட்டேஜ்களை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...