கோவை : பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவ அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பங்கேற்றார்.அதில், அவர் பேசியதாவது :- ஆண்களை விட பெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்கு வகிக்கின்றனர்.ஆங்கிலமும் நகர வாழ்கையும் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்து விட்டது. பெண்கள் முன்பு போல் இல்லாததால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் 30% பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர், எனத் தெரிவித்தார்.
குருமூர்த்தியின் இந்த சர்ச்சை கருத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது இருந்தது. இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, புலியகுளம் பெரியார் சிலை அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘யாகராவயினும் நாகாக்க பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை நிறுத்தி கொள், பெண்களை அவதூறாக பேசாதே’ என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு நகர தலைவர் வனஜா நடராஜன், செயலாளர் சுதா ராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவ அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பங்கேற்றார்.அதில், அவர் பேசியதாவது :- ஆண்களை விட பெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்கு வகிக்கின்றனர்.ஆங்கிலமும் நகர வாழ்கையும் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்து விட்டது. பெண்கள் முன்பு போல் இல்லாததால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் 30% பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர், எனத் தெரிவித்தார்.
குருமூர்த்தியின் இந்த சர்ச்சை கருத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது இருந்தது. இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, புலியகுளம் பெரியார் சிலை அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘யாகராவயினும் நாகாக்க பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை நிறுத்தி கொள், பெண்களை அவதூறாக பேசாதே’ என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு நகர தலைவர் வனஜா நடராஜன், செயலாளர் சுதா ராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.