கோவை : தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இரட்டையர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 355 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை : தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இரட்டையர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 355 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகரில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், துணிகர கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், போதைப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தொடர்ந்து, தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த அடிப்படையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் கீழ் எழுத்துப்பூர்வமாக இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிகளை மீறும் நபர்களை ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை வைக்க எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ட்ரேட் என்ற அடிப்படையில் மாநகர காவல் துணை ஆணையாளருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 29-ம்தேதி புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவர் உறுதி மொழியை மீறியதாக, கோவையில் முதன்முறையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன்கீழ் 313 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மீண்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இருவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (23)மற்றும் சுரேஷ்(23). இந்த இரட்டையர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 16 வழக்குகள் இருக்கின்றன. இப்படியிருக்க இவர்கள் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளித்து இருந்தனர். ஆனால், உறுதி மொழியை மீறி இவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சகோதரர்கள் இருவரையும் 355 நாட்கள் சிறையில் அடைக்க சிறப்பு அதிகாரத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்திரவிட்டார்.
கோவை மாநகரில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், துணிகர கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், போதைப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தொடர்ந்து, தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த அடிப்படையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் கீழ் எழுத்துப்பூர்வமாக இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிகளை மீறும் நபர்களை ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை வைக்க எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ட்ரேட் என்ற அடிப்படையில் மாநகர காவல் துணை ஆணையாளருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 29-ம்தேதி புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவர் உறுதி மொழியை மீறியதாக, கோவையில் முதன்முறையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன்கீழ் 313 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மீண்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உறுதிமொழியை மீறிய இருவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 இன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (23)மற்றும் சுரேஷ்(23). இந்த இரட்டையர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 16 வழக்குகள் இருக்கின்றன. இப்படியிருக்க இவர்கள் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளித்து இருந்தனர். ஆனால், உறுதி மொழியை மீறி இவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சகோதரர்கள் இருவரையும் 355 நாட்கள் சிறையில் அடைக்க சிறப்பு அதிகாரத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்திரவிட்டார்.