கோவையில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்றம் திறப்பு

கோவை : கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று துவங்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று துவங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் இதனை திறந்து வைத்தார். இதில், முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி குணசேகரன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் மற்றும் அரசு வக்கீல்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



புதிதாக திறக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படுதல், இழிவாக பேசுதல் மனதளவிலும் உடலளவிலும் உறுதிப்படுத்துதல், ஏமாற்றி திருமணம் செய்தல் உள்ளிட்ட வன்கொடுமை வழக்குகள் இன்று முதல் விசாரிக்கப்படும். இதுவரை இந்த வழக்குகள் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையல், தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பெண் வன்கொடுமை வழக்குகள் 800 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாநகர பகுதியிலுள்ள 600 வழக்குகள் தற்போது இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...