திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 3 மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் முதலிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஏக்கருக்கும் மேலான குப்பை கிடங்கில் தினமும் 20 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அதிகாலை தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயல்பை விட காற்றின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு புகைமூட்டமாக காணப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியின் 3 மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் முதலிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஏக்கருக்கும் மேலான குப்பை கிடங்கில் தினமும் 20 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அதிகாலை தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயல்பை விட காற்றின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு புகைமூட்டமாக காணப்படுகிறது.