பருவமழைக்கு பின் பசுமையாக காட்சியளிக்கும் மேய்ச்சல் நிலங்கள் : கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை : வறட்சியால் வறண்டு கிடந்த மேய்ச்சல் நிலங்கள், தற்போது பருவமழைக்கு பின் பசுமையாக மாறியுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை : வறட்சியால் வறண்டு கிடந்த மேய்ச்சல் நிலங்கள், தற்போது பருவமழைக்கு பின் பசுமையாக மாறியுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் புறநகர் பகுதிகளான சிறுமுகை, காரமடை மற்றும் கிராம பகுதிகளான பள்ளேப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துரை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. விவசாயத்தின் உப தொழிலாக உள்ள ஆடு, மாடு வளர்ப்பில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்கள் முழுவதும் பொட்டல் காடுகளாக மாறின. இதனால், கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதுடன், அதனை மேய்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவானது. மேலும், பெத்திகுட்டை, சித்தன்குட்டை, டேம்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை உனவிற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல், பவானி ஆற்றினை பரிசல் மூலம் கடந்து ஆடுகளை கொண்டு சென்று மேய்த்து வந்தனர்.



இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது தாமதமாக துவங்கிய போதும், பின்னர் மேற்கு தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியாக உள்ள மேட்டுப்பாளையத்தில் நல்ல மழை பெய்தது. மழை பெய்து இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில், தற்போது காய்ந்து கிடந்த மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் தற்போது பசுமைக்கு திரும்பியுள்ளன. மேய்ச்சல் நிலங்களில் சுமார் ஒரு அடிக்கும் மேல் புட்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து வருவதால், கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு இன்றி அடுத்த பருவமழை வரை இருக்கும். எனவே, இந்த பருவமழையால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பருவமழைக்கு பின் கால்நடைகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளதால், அதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...