வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை : வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை : வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் மலை அடிவார பகுதிகளான தோலம்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துரை, வெள்ளியங்காடு, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை, தென்னை போன்ற பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி வரும் நிலையில், சோளம், தட்டை, அவரை போன்ற தானிய பயிர்களை உற்பத்தி செய்தால், அதனை மான், மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி காரமடையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதுடன், பெருகி வரும் காட்டு பன்றிகள், மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோசங்கள் எழுப்பட்டன. 

மேலும், கூடலூர், நாயக்கன்பாளையம் பகுதிகளில் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வரும் சூழலில், அங்கு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் மற்றும் நாயக்கன்பாளையத்தை யானைகளின் வாழ்விடம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், அறிவிப்பை அரசு வாபஸ் வாங்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...