கோவை : கோவையில் உருவாகி கேரளா செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் உடைந்த தடுப்பணை சரி செய்ய வலியுறுத்தியும், புதிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினரை போலிசார் கைது செய்தனர்.
கோவை : கோவையில் உருவாகி கேரளா செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் உடைந்த தடுப்பணை சரி செய்ய வலியுறுத்தியும், புதிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினரை போலிசார் கைது செய்தனர்.
கோவை அறிவொளிநகர் பகுதியில் உருவாகும் மஞ்சிப்பள்ளம் ஆறு குரும்பபாளையம்,மதுக்கரை, வேலந்தாவலம் வழியாக கேரளா செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே குரும்பபாளையம் பகுதியில் மட்டும் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அண்மையில் பெய்த மழை முற்றிலுமாக கேரளா சென்றது. எனவே, உடனடியாக உடைந்த தடுப்பணையை சரி செய்ய வேண்டும் கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும், தண்ணீரை சேமிக்க வழி வகைகள் வேண்டும் என வலியுறுத்தி மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மதிமுகவினர் குரும்பபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தடுப்பணையில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் வரை நடைபயணமாக சென்று மனு கொடுக்க முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
கோவை அறிவொளிநகர் பகுதியில் உருவாகும் மஞ்சிப்பள்ளம் ஆறு குரும்பபாளையம்,மதுக்கரை, வேலந்தாவலம் வழியாக கேரளா செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே குரும்பபாளையம் பகுதியில் மட்டும் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அண்மையில் பெய்த மழை முற்றிலுமாக கேரளா சென்றது. எனவே, உடனடியாக உடைந்த தடுப்பணையை சரி செய்ய வேண்டும் கூடுதலாக தடுப்பணைகளை கட்ட வேண்டும், தண்ணீரை சேமிக்க வழி வகைகள் வேண்டும் என வலியுறுத்தி மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மதிமுகவினர் குரும்பபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தடுப்பணையில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் வரை நடைபயணமாக சென்று மனு கொடுக்க முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.