திருப்பூர் : 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் அரசு மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் : 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் அரசு மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நோயாளிகள் பாதிக்காத வகையில் மருத்துவர்கள் சிலர் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நோயாளிகள் பாதிக்காத வகையில் மருத்துவர்கள் சிலர் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டுள்ளனர்.