நீலகிரி : உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் வசித்து வருபவர் கோகுல் (40). இவர் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று நீண்டநேரம் ஆகியும், அந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த விடுதியின் ஊழியர்கள், அந்த அறையைச் சென்று பார்த்தனர். அப்போது, அறையில் கோகுல் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு உதவி நகர பி1 காவல்துறையினர் சென்று பார்த்தனர். இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் திருமணம் ஆனவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து. பின்னர், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்பு சம்பவம் கொலையா..? அல்லது தற்கொலையா..?என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் வசித்து வருபவர் கோகுல் (40). இவர் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று நீண்டநேரம் ஆகியும், அந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த விடுதியின் ஊழியர்கள், அந்த அறையைச் சென்று பார்த்தனர். அப்போது, அறையில் கோகுல் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு உதவி நகர பி1 காவல்துறையினர் சென்று பார்த்தனர். இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் திருமணம் ஆனவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து. பின்னர், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்பு சம்பவம் கொலையா..? அல்லது தற்கொலையா..?என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.