ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு

டெல்லியில் இன்று நடந்த ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, தமிழக நீர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

டெல்லியில் இன்று நடந்த ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, தமிழக நீர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார். 

நாட்டின் 73-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ” நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, ஜல் ஜீவன் மிஷனுக்கு, ரூ .3.5 டிரில்லியன் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசின் நீர் மேலாண்மை துறை அமைச்சகத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்துவது குறித்து மத்திய நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஜெகாவாத் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...