மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த மத்திய அரசிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை

மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்தார். 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மனு ஒன்றை அளித்தார். அதில், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின்படி, தமிழகத்திற்கான ஆயிரத்து 196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும். அதோடு, 3,780 கோடியே 81 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்க வேண்டும். மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும். இதேபோல, கோவை - டெல்லி இடையே தினசரி விமான சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ நரேந்திர சிங்‌ டோமராரை சந்தித்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின்‌ ரூ. 415.98 கோடி செயலாக்க மானியம்‌ மற்றும்‌ ரூ. 2,061.87 கோடி அடிப்படை மானியத்‌ தொகையினை விடுவிக்கக்‌ கோரியும்‌, கஜா புயலால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ புதிதாக 2 லட்சம்‌ வீடுகள்‌ பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்‌ கீழ்‌ கட்ட அனுமதி வழங்க அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...