ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து திருப்பூரில் 108 ஊழியர்கள் நோட்டீஸ் விநியோகம்

திருப்பூர் : வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

திருப்பூர் : வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஓட்டுநர், டெக்னீசியன் உட்பட பல பணிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். 



3 வருடங்களுக்கு முன்பு வரை அப்ரைசல் என்ற முறை இருந்ததை கண்டித்து, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அந்த முறை ஒழிக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு கொண்டு வந்ததாகவும், இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வு தற்போது வரை வழங்கப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸில் கூறியுள்ளனர். போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பாக, தாங்கள் செய்யும் வேலை பொதுமக்களுக்கு என்பதால், தங்களது கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் நின்று மக்களுக்கு கோரிக்கை அடங்கிய நோட்டீஸை பொதுமக்களிடம் விநியோகித்து வந்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...