கோவை : அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை : அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோவைக்கு TN 38 N 3034 என்ற எண் கொண்ட அரசு பேருந்தானது, புளியம்பட்டி வழியாக இன்று காலை அன்னூர் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்துடன் ஒருவர் சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் இரு சக்கர வாகனத்தின் மீது மோத கூடாது என்று பேருந்தை மறுபுறம் திருப்பியுள்ளார்.

ஆனால், பேருந்து ஆனது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட நிலையில், படுகாயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பசாமியும், பேருந்தில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தகவலறிந்து வந்த அன்னூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.