நீலகிரி : கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் குதிரை பந்தயம் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் குதிரை பந்தயம் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உதகையில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானம் மாவட்ட நிர்வாகத்திற்கு சுமார் ரூ. 640 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, குதிரைப்பந்தய மைதானத்தை இடமாற்றம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் படுகர்களின் குலதெய்வமான கோயில், பள்ளி, விளையாட்டு மைதானம், சுடுகாடு உள்ளிட்டவற்றை.

பகுதிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த இடத்திற்கு குதிரை பந்தய மைதானம் கொண்டுவர உள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில் நீண்ட காலமாக மக்கள் இவ்விடத்தில் இருந்து வருகிறோம் தற்போது மாவட்ட நிர்வாகம் கலாச்சார சீரழிவு சூதாட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக குதிரைப்பந்தயம் கொண்டுவரப்பட்ட தற்போது மாவட்ட நிர்வாகம் இதை ஊக்குவிக்கக் கூடாது .இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் நீலகிரி மாவட்டத்தில் குதிரைப்பந்தயம் நடக்கக்கூடாது மாற்று இடம் எந்த இடம் கொடுக்கக் கூடாது .என தொடர் போராட்டம் நடத்துவோம் ரேஷன், கார்டு ,ஆதார் கார்டு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது உதகையில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானம் மாவட்ட நிர்வாகத்திற்கு சுமார் ரூ. 640 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, குதிரைப்பந்தய மைதானத்தை இடமாற்றம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் படுகர்களின் குலதெய்வமான கோயில், பள்ளி, விளையாட்டு மைதானம், சுடுகாடு உள்ளிட்டவற்றை.

பகுதிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த இடத்திற்கு குதிரை பந்தய மைதானம் கொண்டுவர உள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில் நீண்ட காலமாக மக்கள் இவ்விடத்தில் இருந்து வருகிறோம் தற்போது மாவட்ட நிர்வாகம் கலாச்சார சீரழிவு சூதாட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக குதிரைப்பந்தயம் கொண்டுவரப்பட்ட தற்போது மாவட்ட நிர்வாகம் இதை ஊக்குவிக்கக் கூடாது .இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் நீலகிரி மாவட்டத்தில் குதிரைப்பந்தயம் நடக்கக்கூடாது மாற்று இடம் எந்த இடம் கொடுக்கக் கூடாது .என தொடர் போராட்டம் நடத்துவோம் ரேஷன், கார்டு ,ஆதார் கார்டு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.