திருப்பூர் : தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் : தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில், திருப்பூரில் மட்டும் தேர்வெழுத 3,782 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு 11.30 மணிக்கு முடிவடைகிறது. திருப்பூரில் ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி, குமரன் பெண்கள் கல்லூரி ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள காவலர் தேர்வு மையங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் நிக்ஷா மிட்டல், உதவி ஆணையர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநகர ஆணையர் சஞ்சய் குமார் பேசுகையில், "நாளை நடைபெற உள்ள காவலர்களுக்கான தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில், திருப்பூரில் மட்டும் தேர்வெழுத 3,782 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு 11.30 மணிக்கு முடிவடைகிறது. திருப்பூரில் ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி, குமரன் பெண்கள் கல்லூரி ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள காவலர் தேர்வு மையங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் நிக்ஷா மிட்டல், உதவி ஆணையர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநகர ஆணையர் சஞ்சய் குமார் பேசுகையில், "நாளை நடைபெற உள்ள காவலர்களுக்கான தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.