கோவை : நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, 2 பேரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 2 பேரில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சரியாக எந்த இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்த தீவிரவாதிகள் விவகாரத்தில் தகவல்கள் ஏதும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகாமல் இருக்க போலீசார் ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.