ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 23 பேர் உயிர் வாழ முடியும் : நிபுணர்கள் தகவல்

நீலகிரி : ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 23 பேர் உயிர் வாழ முடியும் என உதகையில் நடைபெற்ற உடல், உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

நீலகிரி : ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 23 பேர் உயிர் வாழ முடியும் என உதகையில் நடைபெற்ற உடல், உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்தனர். 



 

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் உடல், உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில், கோவை, சென்னை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துள்ள 420 பேரும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதில், உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.



குறிப்பாக, ஒரு மனிதன் தனது உறுப்புகளை தானம் செய்தால் 23 பேர் உயிர் வாழ முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மிக மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 80 சதவிகித பேர் உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக இறப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...