தீவிரவாத ஊடுருவலையடுத்து வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் ராணுவம் குவிப்பு : குன்னூர் மலை ரயில் பயணிகள் சோதனைக்குப் பின் அனுமதி

நீலகிரி : தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ பயிற்சி முகாம்கள் மற்றும் மலை ரயில்களில் முழு சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நீலகிரி : தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ பயிற்சி முகாம்கள் மற்றும் மலை ரயில்களில் முழு சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.



தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். 



இதில், நீலகிரி மாவட்டத்தில் முக்கிய ராணுவ பகுதியான மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் மற்றும் ராணுவ பகுதிகளில் துப்பாக்கிய ஏந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிவிரைவு படை போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முழு சோதனைக்குப் பிறகு தான் ராணுவ பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோன்று, மலை ரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் முழு சோதனைக்குப் பிறகு மலை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காவல் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மற்றும் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஆகியோர் அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிலவரங்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்குவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...