கோவை : பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ள பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
கோவை : பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ள பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றுலா தளமான உதகையின் நுழைவு வாயிலாகவும், கேரளாவின் எல்லையோர மலைப்பகுதிகளைக் கொண்ட மேட்டுப்பாளையத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் 24 மணி நேரமும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாதுகாப்பிற்காக பிளாக் கமெண்டோ என்ற சிறப்பு அதிவிரைவு படையினர் இன்று மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுளனர். நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர். பவானி ஆற்றுப் பாலம் சோதனைச் சாவடியில் இருந்து துவங்கிய இந்த அணி வகுப்பானது, உதகை - மேட்டுப்பாளையம் சாலையின் வழியே வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

மேலும், பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காவல் சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றுலா தளமான உதகையின் நுழைவு வாயிலாகவும், கேரளாவின் எல்லையோர மலைப்பகுதிகளைக் கொண்ட மேட்டுப்பாளையத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் 24 மணி நேரமும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாதுகாப்பிற்காக பிளாக் கமெண்டோ என்ற சிறப்பு அதிவிரைவு படையினர் இன்று மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுளனர். நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர். பவானி ஆற்றுப் பாலம் சோதனைச் சாவடியில் இருந்து துவங்கிய இந்த அணி வகுப்பானது, உதகை - மேட்டுப்பாளையம் சாலையின் வழியே வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

மேலும், பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காவல் சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.