கோவை சுங்கச்சாவடிகளில் விடிய விடிய சோதனை நடத்திய போலீசார்

கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில், விடிய விடிய போலீசார் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தினர்.


கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில், விடிய விடிய போலீசார் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு 12 மணி முதல் தற்போது வரை மாநகர மாவட்ட போலீசார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில்,கருமத்தம்பட்டி - கணியூர் சுங்கச்சாவடியில் இருந்து கோவைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கார், லாரி, பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 



இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நகருக்குள் நுழையலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான தணிக்கைக்கு பிறகு நகருக்குள் உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...