திருப்பூர் : திருப்பூரில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டு ச் சென்ற காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டு ச் சென்ற காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் - மங்கலம் சாலையிலுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக தி.மு.க. கட்சி கொடியுடன் வந்த மஹிந்திரா ஜைலோ காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரின் பின்பக்க சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஐம்பது கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, காரில் இருந்த சதீஸ்குமார், ஞானபிரகாஷ் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் தி.மு.க. கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதனிடையே, தி.மு.க. பிரமுகர் கட்சி கொடி கட்டப்பட்ட காரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் - மங்கலம் சாலையிலுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக தி.மு.க. கட்சி கொடியுடன் வந்த மஹிந்திரா ஜைலோ காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரின் பின்பக்க சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஐம்பது கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, காரில் இருந்த சதீஸ்குமார், ஞானபிரகாஷ் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் தி.மு.க. கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதனிடையே, தி.மு.க. பிரமுகர் கட்சி கொடி கட்டப்பட்ட காரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.