கோவை : கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ஒன்றான ஃப்ரூக் பீல்ட்ஸில் கமாண்டோ போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை : கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் ஒன்றான ஃப்ரூக் பீல்ட்ஸில் கமாண்டோ போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து துவங்கிய பாதுகாப்பு சோதனைகள் தற்போது வரை தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை கோவையில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஃப்ரூக் பீல்ட்ஸ் மாலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிகுண்டு நிபுணர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக கமாண்டோ படையினரும் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பன்னாட்டு விமான நிலையம், விமான நிலையம் அருகில் உள்ள ஃபன் மால் ஆகிய இடங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளப்பட இருக்கிறது,” தெரிவித்தார்.