திருப்பூர் : தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை அடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை அடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை வழியாக தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தமிழக காவல்துறைக்கு வந்த எச்சரிக்கையையடுத்து கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர பகுதிகளில் 9 இடங்களிலும், மாவட்டத்தின் ஊடகப் பகுதிகளான உடுமலை, தாராபுரம், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லை ஆகிய பகுதிகளில் இரண்டு இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.