கோவை : சூலூர் விமானப் படை தளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் நாகை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
கோவை : சூலூர் விமானப் படை தளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் நாகை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியின் சி.ஐ.எஸ்.எஃப். தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் ஷிஷிர் குமார் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் இந்துக்களைப் போன்று நெற்றியில் திலகமிட்டு சுற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இல்யாஷ் அன்வர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த 21-ம் தேதி கோவையில் நடமாடி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி, சூலூர் விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மதம்சார்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, வேளாங்கண்ணி கோவில் திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்., 08-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த தாக்குதல்களை நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, உள்ளூர் போலீசார் மற்றும் பிற உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியின் சி.ஐ.எஸ்.எஃப். தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் ஷிஷிர் குமார் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் இந்துக்களைப் போன்று நெற்றியில் திலகமிட்டு சுற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இல்யாஷ் அன்வர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த 21-ம் தேதி கோவையில் நடமாடி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி, சூலூர் விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மதம்சார்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, வேளாங்கண்ணி கோவில் திருவிழா நடைபெறும் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்., 08-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த தாக்குதல்களை நடத்த அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, உள்ளூர் போலீசார் மற்றும் பிற உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.