கோவை : கோவையில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயாராக இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்று, தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பல் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 2 ஆயிரம் போலீசார் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் என வெளியான இரண்டு புகைப்படங்கள் காவல் துறையினர் வெளியிடவில்லை. இதுவரை யாரையும் குறிப்பிட்டு சந்தேகிக்கவில்லை. கோவில்கள், மால்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம். பாதுகாப்பு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளனர், எனக் கூறினார். மேலும், இந்திய இரானுவம் மற்றும் விமானப்படையை தயார் நிலையில் வைக்க கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் கேட்டுகொண்டுள்ளார்.