கோவை : தீவிரவாத ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : தீவிரவாத ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் தஞ்சம் புகுந்து இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 பேரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும், 5 பேர் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் இந்துக்களை போல பொட்டு வைத்து கொண்டு கோவைக்குள் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கோவை மாவாட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.