பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், (பொள்ளாச்சி) அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி, வட்டாட்சியர் தணிகைவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- நகரப்பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைங்கள் என பல்வேறு மருத்துவ வசதிகள் வாய்ப்புகள் உள்ளபோதிலும், மக்கள் பெருமளவில் தங்களது சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைதான் நாடி வருகின்றனர். எனவேதான், அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கக்கூடிய வகையில், அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றது. அதனைபோலவே, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பார்க்க வருவோர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர், கழிப்பாறை மற்றும் தங்கும் அறை ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதிதிட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகள் விரைவில் முடித்து மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,750 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்;. மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையும், பிரசவங்களுக்கான சிகிச்சையும், இருதய சிகிச்சை மற்றும் அனைத்து வகை சிகிச்சைகளும் மிக சிறந்த முறையில் இங்கு அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை, உள்நோயாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை மையம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை, சிறப்பு வார்டு ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மக்களின் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், கீழ்நிலையிலுள்ள மருத்துவகள், செவிலியர்கள், இதரபணியாளர்கள் அரசின் திட்டங்களை பெறுப்புணர்ந்து செயல்படுத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் தரம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவ கருவிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவ கருவிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...