ரூ. 8 கோடியில் கட்டப்பட்டும் பயனற்று கிடக்கும் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரி : பள்ளிக்கூட கட்டிடத்தில் இரு அமர்வுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை

கோவை : மேட்டுப்பாளையத்தில் ரூ. 8 கோடி செலவில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டும், அதற்கு தேவையான உபகரணங்கள் அளிக்கப்படாததால், பள்ளி கட்டிடத்தில் செயல்படும் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இரு அமர்வுகளாக வகுப்புகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் ரூ. 8 கோடி செலவில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டும், அதற்கு தேவையான உபகரணங்கள் அளிக்கப்படாததால், பள்ளி கட்டிடத்தில் செயல்படும் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இரு அமர்வுகளாக வகுப்புகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது, அதற்கு தனியாக கட்டிடம் இல்லாததால், தற்காலிகமாக காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையிலேயே ஒரு பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்று கொடுக்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் இங்கு மாணவர்களின் சேர்க்கை என்பது குறைவாக இருந்தது. தற்போது, இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டமாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.



இதற்கிடையே, கல்லூரிக்காக காரமடை அருகே உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் மலைப்பகுதியில் 5 1/2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு ரூ. 8 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கபட்டது. இதையடுத்து, இந்த கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதியதாக கட்டப்பட்ட கல்லூரியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில தேவையான டேபிள், பெஞ்ச், இருக்கைகள் இதுவரை அளிக்கப்படவில்லை. மேலும், புதிய கட்டிடத்தில் தரமான அனைத்து வகையான ஆய்வுகளுக்கும் அறைகள் ஒதுக்கபட்டாலும், அதற்கு தேவையான பொருட்கள் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், புதிய கட்டிடம் ஏற்படுத்தப்பட்டும் எவ்வித பயனும் இன்றி, அரசு கலை கல்லூரியானது பழையபடி பள்ளி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. 

மாணவ, மாணவியர்களுக்கு படிப்பதற்கு தேவையான இடவசதி இருந்தால்தான், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆனால், இந்த பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சில மாணவர்களுக்கு காலையிலும், மீதமுள்ள மாணவர்களுக்கு பிற்பகலிலும் பாடம் கற்பிக்கூடிய நிலைதான் உள்ளது. இதனால், மாணவர்களுக்கு சுகாதாரமான இடத்தில் அழகான கட்டிடம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு தேவையான பொருட்களை பெற அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், புதியதாக அமைக்கப்பட்ட கட்டிடம் வீணாக பயனற்று உள்ளது‌. எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக பெற்று, புதிய கட்டிடத்தின் கல்லூரி செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...