நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, விதை கிழங்குகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, விதை கிழங்குகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் வெள்ளத்தால் சூழ்ந்து பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட மேலும் பல மலைகாய்கறிகள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நீர் வடிய தொடங்கி பின்னர், மீண்டும் விவசாயப் பணிகள் செய்ய விவசாயிகள் தயாராகியுள்ளனர் இந்த நிலையில், அதிக பயிரிடப்படும் விதை கிழங்கின் விற்பனை உதகை நகரில் உள்ள மண்டிகளில் மந்தமாக காணப்படுகிறது.

பஞ்சாப், கோலாறு, நைனிட்டால் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் விதை கிழங்குகள், உதகையிலுள்ள மண்டிகளில் மழைக்கு முன் கிலோ ரூ. 30-லிருந்து ரூ. 35 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ. 20 லிருந்து ரூ. 25 வரை விற்பனையாகிறது. அதேபோல, ஒரு மூட்டை மழைக்கு முன் ரூ. 1,000-லிருந்து ரூ. 1,100 வரை விற்பனையாகிய விதை கிழங்குகள், தற்போது ரூ. 700 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இவற்றை வாங்கிச் செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஏற்கனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் உரத்தினை ஒரு போகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது விதை கிழங்குகளின் விற்பனையும் மந்தமாக இருப்பதால் விற்பனையாளர்களும் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் வெள்ளத்தால் சூழ்ந்து பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட மேலும் பல மலைகாய்கறிகள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நீர் வடிய தொடங்கி பின்னர், மீண்டும் விவசாயப் பணிகள் செய்ய விவசாயிகள் தயாராகியுள்ளனர் இந்த நிலையில், அதிக பயிரிடப்படும் விதை கிழங்கின் விற்பனை உதகை நகரில் உள்ள மண்டிகளில் மந்தமாக காணப்படுகிறது.

பஞ்சாப், கோலாறு, நைனிட்டால் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் விதை கிழங்குகள், உதகையிலுள்ள மண்டிகளில் மழைக்கு முன் கிலோ ரூ. 30-லிருந்து ரூ. 35 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ. 20 லிருந்து ரூ. 25 வரை விற்பனையாகிறது. அதேபோல, ஒரு மூட்டை மழைக்கு முன் ரூ. 1,000-லிருந்து ரூ. 1,100 வரை விற்பனையாகிய விதை கிழங்குகள், தற்போது ரூ. 700 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இவற்றை வாங்கிச் செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஏற்கனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் உரத்தினை ஒரு போகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது விதை கிழங்குகளின் விற்பனையும் மந்தமாக இருப்பதால் விற்பனையாளர்களும் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.