நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில அதிகாரிகள் பணிக்கு செல்ல முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில அதிகாரிகள் பணிக்கு செல்ல முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட 41 தளவாடப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், 2-வது நாளாக இந்தப் போராட்டம் இன்று நடந்தது. அப்போது, அதிகாரிகள் சிலர் பணிக்கு செல்ல முயன்றதால் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் மீண்டும் திரும்பி சென்றனர். இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தளவாடப் பொருட்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட 41 தளவாடப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், 2-வது நாளாக இந்தப் போராட்டம் இன்று நடந்தது. அப்போது, அதிகாரிகள் சிலர் பணிக்கு செல்ல முயன்றதால் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் மீண்டும் திரும்பி சென்றனர். இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தளவாடப் பொருட்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.