கோவை : தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமியை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். அங்கு தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி முதலமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 147 கி.மீ. தூரம் செல்லும் நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் நதி மீட்புக்கு என தமிழக அரசு தனி அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். தமிழக அரசு பால் கொள்முதல் விலை திருப்தியானதாக இல்லை என்றாலும், இந்த கொள்முதல் விலை விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளது," என தெரிவித்தார்.