கோவை : இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான பல்துறை குழும நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, கோவையில் உள்ள 12 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
கோவை : இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான பல்துறை குழும நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, கோவையில் உள்ள 12 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
கோவை அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவர் திரு கே.ராஜாமணி, எல் அண்டு டி உருவாக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி முன்னிலையில் மாநில கல்வித் துறையிடம் முறைப்படி ஒப்படைத்தார். இவ்விழாவில், கல்வித் துறையின் அதிகாரிகள், அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பி.டி.ஏ மற்றும் எல் அண்டு டி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லார்சன் அண்டு டுப்ரோ, முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் ஒரு பெருநிறுவனமாக இருப்பதால், கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நல நோக்கங்களை ஆதரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, இந்தியா முழுவதும் பல இடங்களில் நீண்டகாலம் தொடரும் முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் கீழ், எல் அண்டு டி நிறுவனம் குடிநீர் வசதி, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள், கை கழுவும் வசதிகளை அசோகபுரம், வெள்ளலூர், பிச்சனூர், செட்டிப்பாளையம், அறிவொளிநகர், குமிட்டிபதி, குரும்பப்பாளையம் மற்றும் ஆனைக்கட்டி ஆகிய எட்டு அரசுப் பள்ளிகளில் உருவாக்கியுள்ளது.
மேலும், மலுமிச்சம்பட்டி, பிச்சனூர், வெள்ளலூர் மற்றும் ஆனைகட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மினி - அறிவியல் மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளலூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றுடன் நான்கு அரசுப்பள்ளியில் (அசோகபுரம், வெள்ளாளப்பாளையம், மைலேரிபாளையம் அண்டு ஆனைகட்டி) வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனைகட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை புதுப்பித்திருக்கிறது எல் அண்டு டி..
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இயற்கையை ஊக்குவிக்கும் வகையில் காடுகளை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ’மியாவாகி’ முறையைப் பின்பற்றி, அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். கோயம்புத்தூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் முறையாக இது போன்ற முயற்சி எல் அண்டு டி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எல் அண்டு டி, கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இணைந்து கோவையில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை இந்த நிதியாண்டிலேயே கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.
கோவை அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவர் திரு கே.ராஜாமணி, எல் அண்டு டி உருவாக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி முன்னிலையில் மாநில கல்வித் துறையிடம் முறைப்படி ஒப்படைத்தார். இவ்விழாவில், கல்வித் துறையின் அதிகாரிகள், அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பி.டி.ஏ மற்றும் எல் அண்டு டி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லார்சன் அண்டு டுப்ரோ, முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் ஒரு பெருநிறுவனமாக இருப்பதால், கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நல நோக்கங்களை ஆதரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, இந்தியா முழுவதும் பல இடங்களில் நீண்டகாலம் தொடரும் முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் கீழ், எல் அண்டு டி நிறுவனம் குடிநீர் வசதி, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள், கை கழுவும் வசதிகளை அசோகபுரம், வெள்ளலூர், பிச்சனூர், செட்டிப்பாளையம், அறிவொளிநகர், குமிட்டிபதி, குரும்பப்பாளையம் மற்றும் ஆனைக்கட்டி ஆகிய எட்டு அரசுப் பள்ளிகளில் உருவாக்கியுள்ளது.
மேலும், மலுமிச்சம்பட்டி, பிச்சனூர், வெள்ளலூர் மற்றும் ஆனைகட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மினி - அறிவியல் மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளலூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றுடன் நான்கு அரசுப்பள்ளியில் (அசோகபுரம், வெள்ளாளப்பாளையம், மைலேரிபாளையம் அண்டு ஆனைகட்டி) வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனைகட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை புதுப்பித்திருக்கிறது எல் அண்டு டி..
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இயற்கையை ஊக்குவிக்கும் வகையில் காடுகளை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ’மியாவாகி’ முறையைப் பின்பற்றி, அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். கோயம்புத்தூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல் முறையாக இது போன்ற முயற்சி எல் அண்டு டி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எல் அண்டு டி, கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இணைந்து கோவையில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை இந்த நிதியாண்டிலேயே கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.