கோவை : மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி, 150 மி.கி. தங்கத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உருவம் பொறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை : மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி, 150 மி.கி. தங்கத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல உருவம் பொறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகையின் போது மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

தற்போது, மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி யு.எம்.டி ராஜா, 150 மி.கிராம் தங்கத்தில் குழாயில் இருந்து இரண்டு துளி நீர் வெளியேறுவது போல் வடிவமைத்து உள்ளார். இதனை செய்ய ஒரு நாள் ஆனதாகக் கூறிய அவர், மழை நீரை சேகரிக்க மக்கள் முன்வர வேண்டும் எனவும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கியதாக தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகையின் போது மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

தற்போது, மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி யு.எம்.டி ராஜா, 150 மி.கிராம் தங்கத்தில் குழாயில் இருந்து இரண்டு துளி நீர் வெளியேறுவது போல் வடிவமைத்து உள்ளார். இதனை செய்ய ஒரு நாள் ஆனதாகக் கூறிய அவர், மழை நீரை சேகரிக்க மக்கள் முன்வர வேண்டும் எனவும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கியதாக தெரிவித்தார்.