கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் என கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் என கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 25,000 லாரிகள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 3,000 லாரிகள் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இதனால், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்," என வலியுறுத்தினர்.
தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 25,000 லாரிகள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 3,000 லாரிகள் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இதனால், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்," என வலியுறுத்தினர்.