கோவை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் வந்து கொண்டிருந்த சிறுமி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் வந்து கொண்டிருந்த சிறுமி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கமலா மில் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் பாலமுருகன் மற்றும் பிரியா தம்பதியினர்.இவர்களுக்கு பிரவீனா என்ற 11 வயது பெண் குழந்தை உள்ளது.
இப்படியிருக்க, தாயார் பிரியாவும் சிறுமி பிரவீனாவும் செவ்வாய் மாலை சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது TN 58 N 2319 என்ற எண் கொண்ட பேருந்தின் பின் சென்று கொண்டிருந்த போது பேருந்தானது இடதுபுறம் ஒதுங்கியது.
இதில் தாயார் பிரியா நிலை தடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார்.
இதில் சிறுமி பிரவீனா படுகாயமடைந்தார். தாயார் பிரியாவிற்கு காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.