வாழும் இடத்திற்கே பட்டா வழங்க வேண்டும் : குடிசை மாற்று வாரியத்தால் வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் மற்றும் எம் பி. பி.அர். நடராஜன் கோரிக்கை

கோவை : வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலை பகுதிகளில் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என்றும், இல்லையேல் நகரத்தில் உள்ள அரசுத்துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு முத்தண்ணன்குளம், குமாரசாமி காலணி, சங்கனூர் சாலை, சண்முகாநகர், பூசாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். இதனையறிந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பது என அனைவரும் குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர். இதனையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 30ம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...