கோவை : அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை தேவைக்கு அதிகமாக நிரப்புவதும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யும் குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து இ.பி.எப். ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை தேவைக்கு அதிகமாக நிரப்புவதும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யும் குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து இ.பி.எப். ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருங்கால வைப்புநிதி ஊழியர் சங்கம் சார்பாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இதில், குரூப் பி,சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பதவிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், அதே சமயம் குரூப் ஏ பிரிவு பதவிகளில் அதிகாரிகளை அதிக அளவு தேவையில்லாமல் புதிதாக சேர்ப்பதை நிறுத்த வேண்டும், குரூப் பி, சி மற்றும் டி ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கோவை எம்.பி நடராஜன் பேசியதாவது :- களத்திலேயே ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இ.பி.எப். துறையில் அதிகாரிகளின் ராஜ்யமாக இருக்கிறது. கீழ்நிலை ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் இருப்பது, 30 ஆண்டுகள் பணி செய்தாலும் பதவி உயர்வு விவகாரத்தில் தலையிடாமல், தங்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வில் நாட்டம் செலுத்துவது என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில் இ.பி.எப் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய தலையீட்டை செலுத்துவேன், என்றார்.

முன்னதாக, இ.பி.எப். ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் ஜி.சுப்பிரமணி கூறுகையில், “கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இ.பி.எப். துறை மற்றும் மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நாள்தோறும் நடத்த உள்ளோம். இதன்தொடர்ச்சியாக, வரும் 28ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் செபஸ்டின், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

வருங்கால வைப்புநிதி ஊழியர் சங்கம் சார்பாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இதில், குரூப் பி,சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பதவிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், அதே சமயம் குரூப் ஏ பிரிவு பதவிகளில் அதிகாரிகளை அதிக அளவு தேவையில்லாமல் புதிதாக சேர்ப்பதை நிறுத்த வேண்டும், குரூப் பி, சி மற்றும் டி ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கோவை எம்.பி நடராஜன் பேசியதாவது :- களத்திலேயே ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இ.பி.எப். துறையில் அதிகாரிகளின் ராஜ்யமாக இருக்கிறது. கீழ்நிலை ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் இருப்பது, 30 ஆண்டுகள் பணி செய்தாலும் பதவி உயர்வு விவகாரத்தில் தலையிடாமல், தங்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வில் நாட்டம் செலுத்துவது என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில் இ.பி.எப் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய தலையீட்டை செலுத்துவேன், என்றார்.

முன்னதாக, இ.பி.எப். ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் ஜி.சுப்பிரமணி கூறுகையில், “கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இ.பி.எப். துறை மற்றும் மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நாள்தோறும் நடத்த உள்ளோம். இதன்தொடர்ச்சியாக, வரும் 28ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் செபஸ்டின், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.