கோவை : வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை : வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 21-ம் அன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர் முகாம், நிர்வாக காரணத்தினால் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளைத் தெரிவித்து தீர்வு பெறவும், அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 21-ம் அன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர் முகாம், நிர்வாக காரணத்தினால் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளைத் தெரிவித்து தீர்வு பெறவும், அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.