கோவை : மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை : மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 850 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் குப்பை கிடங்கு செயல்படும் முறை குறித்து நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜோதிமணி கோவையில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தினார். குப்பை மேலாண்மையில் மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 850 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் குப்பை கிடங்கு செயல்படும் முறை குறித்து நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜோதிமணி கோவையில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தினார். குப்பை மேலாண்மையில் மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.