கோவை : ஒண்டிப்புதூர் காவலர் சோதனை சாவடி அருகே செயல்பட்டு வந்த ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : ஒண்டிப்புதூர் காவலர் சோதனை சாவடி அருகே செயல்பட்டு வந்த ஆவின் பாலகம், திடீரென மதுபானக் கடையாக மாற்றப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. இந்த பாலகமானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. இப்படி இருக்க நேற்று திடீரென அந்த பாலகத்தின் பலகைகள் அடையாளங்கள் ஏதும் அகற்றப்படாமல் மது விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாலகத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என முற்றுகையிட்டனர். அப்போது, மது விற்பனையாளர்கள், இந்த ஆவின் பாலகத்தை மதுக்கடையாக மாற்ற உரிமம் பெறப்பட்டு உள்ளது என தங்களின் உத்தரவு நகலை காண்பித்தனர்.
இருப்பினும், மதுவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இப்பகுதியில் மதுக்கடை வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி கடை வந்தால் கடையை நடத்த விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மதுக்கடை திறப்பதற்கான உரிமம் அவர்களிடம் உள்ளதால், பொதுமக்கள் கலைந்து போக வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போலீசார் தற்காலிகமாக ஆவின் பாலகத்தில் நடைபெற்ற மது விற்பனையை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாலகமும் மூடப்பட்டது. இதனிடையே, மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. இந்த பாலகமானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. இப்படி இருக்க நேற்று திடீரென அந்த பாலகத்தின் பலகைகள் அடையாளங்கள் ஏதும் அகற்றப்படாமல் மது விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாலகத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என முற்றுகையிட்டனர். அப்போது, மது விற்பனையாளர்கள், இந்த ஆவின் பாலகத்தை மதுக்கடையாக மாற்ற உரிமம் பெறப்பட்டு உள்ளது என தங்களின் உத்தரவு நகலை காண்பித்தனர்.
இருப்பினும், மதுவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இப்பகுதியில் மதுக்கடை வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி கடை வந்தால் கடையை நடத்த விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மதுக்கடை திறப்பதற்கான உரிமம் அவர்களிடம் உள்ளதால், பொதுமக்கள் கலைந்து போக வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போலீசார் தற்காலிகமாக ஆவின் பாலகத்தில் நடைபெற்ற மது விற்பனையை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாலகமும் மூடப்பட்டது. இதனிடையே, மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.