கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் தலைமையில் ஊழியர்கள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

கோவை : கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில், மதநல்லிணக்க உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

கோவை : கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில், மதநல்லிணக்க உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.



அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாவது, "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும், இதனால் உறுதி அளிக்கிறேன்," என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (நிர்வாகம்) மோகனசுந்தரி, மாநகர கல்வி அலுவலர் கே.பழனி, மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), குடிநீர் கணக்கு பிரிவு அலுவலர் லட்சுமிபிரபா, மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...