தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : திருப்பூர் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் ராயபுரம் பகுதிக்குட்பட்ட முருகன் மன்றம் வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ளவர்கள் வழக்கம் போல தங்களது கார் மற்றும் ஆட்டோக்களை நேற்று வீட்டிற்கு வெளியே நிறுத்தி உள்ளனர். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்த காரின் முகப்பு கண்ணாடிகள் மற்றும் மிரர் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த பனியன் நிறுவன சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு கார் கண்ணாடியை தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...