கோவை : பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குதல், மாத ஓய்வூதியம் ரூ. 6,000 வழங்கிட வேண்டும், பணி நேரத்தை 10 மணியில் இருந்து 8 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் புருஷோத்தமன் தலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கிருஷ்ணகிரி டாஸ்மாக் விற்பனையாளர் ராஜா படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், அவரது வாரிசுகளுக்கு உடனடியாக அரசு பணி வழங்கவும், சிறப்பு நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் வலியுறுத்தினர்.