குன்னூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி ஒத்திகை

நீலகிரி : குன்னூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.

நீலகிரி : குன்னூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.



குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் பணிபுரியும் 61 இந்திய ராணுவ வீரர்களுக்கு, பணியின் போது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட்டு தீயை அணைப்பது மற்றும் இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கத்தினை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் நிலைய காப்பாளர்கள் செய்து காண்பித்தனர்.

இது குறித்து மெட்ராஸ் ராணுவ பயிற்சியாளர் ராஜ்குமார் கூறுகையில், "எங்கள் ராணுவ பணியாளர்கள் 20 அல்லது 22 ஆண்டுகள் பணியாற்றி மறுசுழற்சியில் பணிபுரியும் போது, பிரதம மந்திரி கோசல் விகாஸ் யோஜனபடி, ஒரு மாதம் அவர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீ அணைப்பு குறித்த விளக்கங்களை தெரிந்து கொள்ள குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தோம். எங்களுக்கு சிறப்பான செயல்முறை விளக்கத்தை அளித்தார்கள்," என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...